search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் 23-ந் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி
    X

    கோவை மாவட்டத்தில் 23-ந் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி

    • ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளிக்கலாம்
    • பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில், 23-ந் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது. பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.

    கோவை மாவட்டத்தில், 11தாலுகாக்கள் உள்ளன. இதில் ஆனைமலையில் கலெக்டர் தலைமையிலும், கிணத்துக்கடவில் டி.ஆர். ஓ. தலைமையிலும் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

    பொள்ளாச்சியில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் முன்னிலையில் 23 முதல் 31-ந் தேதி வரை, வால்பாறையில் டி.ஆர்.ஓ. முன்னிலையில் 23-ந் தேதி மட்டும், சூலுாரில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையிலும், மதுக்கரையில் கோவை தெற்கு கோட்டாட்சியர் முன்னிலையிலும், 23 முதல் 30 -ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ந் தேதி வரை, மேட்டுப்பாளை யத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக் டர் முன்னிலையில், 23 முதல் 30-ந் தேதி வரை, அன்னுாரில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 23 முதல் 25-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.கோவை வடக்கு தாலுகாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் 23 முதல், 31-ந் தேதி வரை, தெற்கு தாலுகா வில் 23 முதல் 24-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத்தல், முதி யோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அந்தந்த தாலுகா அலுவல கங்களில் நடைபெறும் ஜமாபந்தியில், காலை 10 மணியளவில் மனு அளிக்கலாம் என, கலெக் டர் கிராந்திகுமார் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×