search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி
    X

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி

    • அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் பழனிசாமி தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர் சண்முகம்,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவாசலம், சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

    ஜனவரி 29ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, வரும் பிப்ரவரி19- ந்தேதி அன்று மாற்று இடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று அழைப்பது, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும், விளையாட்டு ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்துவது.

    மேலும் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில்,உள்ளூர், மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    Next Story
    ×