என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய காட்சி.
அ.தி.மு.க போராட்டத்தால்தான் பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைத்தது
- விலைவாசி உயர்வு, சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்சினை களால் மக்கள் அவதிய டைந்து வருகின்றனர்.
- அ.தி.மு.க.வின் தொடர் போராட்டத்தால்தான் பெண்களுக்கு உரிமை த்தொகை ரூ.1000 கிடைத்து ள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகரில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள்விழா பொது க்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பேரவை செயலாளர் பாரதிமுருகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க பொருளாளரு மான திண்டுக்கல் சீனிவா சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய தாவது, தி.மு.க ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. அமலாக்கத்துறையால் ஒரு அமைச்சர் கைதாகி சிறையில் இருக்கிறார்.
தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு, சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்சினை களால் மக்கள் அவதிய டைந்து வருகின்றனர். இதை திசைதிருப்ப முதல்-அமைச்சர் தனது மகனை சனாதனம் குறித்து பேச வைத்துள்ளார். இந்த சர்ச்சை தீயாக மாறியதால் பல பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன.
மேலும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டதால் சனாதனம் குறித்து யாரும் பேசக்கூடாது என முதல்-அமைச்சர் அறிக்கை விடு கிறார்.
அ.தி.மு.க.வின் தொடர் போராட்டத்தால்தான் பெண்களுக்கு உரிமை த்தொகை ரூ.1000 கிடைத்து ள்ளது. அதுவும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு தான் கொடுக்கப்படுகிறது. அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் வரை அ.தி.மு.க போராடும். ஒவ்வொரு நபருக்கும் ரூ.29 ஆயிரம் தி.மு.க அரசு பாக்கி வைத்துள்ளது. நல்ல வேளையாக ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படு கிறது. இல்லையென்றால் தி.மு.க.வினர் அதிலும் கமிசன் வசூலித்திரு ப்பார்கள்.
ஒருவீட்டுக்கு ரூ.3.5 லட்சம் கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை தி.மு.க அரசு மாற்றியுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்து என்றார்கள். ஆனால் இரண்டரை ஆண்டுகளாகி யும் பேனா மற்றும் மை தேடிக்கொண்டி ருக்கின்ற னர். மேலும் கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு, 5 லட்சம் காலிப்பணி யிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் என பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழக அரசின் வருவாய் குடிமகன்களை நம்பி உள்ளது. ரூ.1000 பெண்க ளிடம் கொடுத்துவிட்டு அதை குடிமகன்கள் மூலம் மதுவிலை உயர்த்தி பறிக்கப்படுகிறது. பட்டியலைமைப்பை சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. எனவே சிறுபான்மையினர், பட்டியலினமக்கள் பாதுகாப்பாக இருக்க அ.தி.மு.கவே நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெ ண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ,தலைமை கழக பேச்சாளர் உமாசங்கர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி, நடராஜன், பிரேமகுமார், அவை தலைவர் சங்கரநாராயணன், முன்னாள் மாநில பொது க்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் திவான் பாட்சா, ரவிக்குமார், ஜெயபாலன்,ஜெயராமன், பழனிச்சாமி, லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் . இறுதியில் மாநகராட்சி எதிர்கட்சி துணைதலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.