என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் பொதுமக்களுக்கு அன்னதானம்
    X

    பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டக் காட்சி.

    உடுமலையில் பொதுமக்களுக்கு அன்னதானம்

    • உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் வக்கீல் பொன்ராஜ் , உடுமலைப்பேட்டை ரோட்டரி கேலக்ஸி சங்கத்தின் பொருளாளர் வக்கீல் நசீர் உசேன் மற்றும் சங்க ஒருங்கிணைப்பாளர் அனுசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×