search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாரதா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
    X

    கருத்தரங்கு நடைபெற்றபோது எடுத்த படம்.

    சாரதா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

    • சர்வதேச கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.
    • சிறப்பு விருந்தினராக ம.தி.தா. கல்லூரி உதவிபேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர்கல்லூரியில் கணினி பயன்பாட்டுத்துறையில் வயர்லெஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் பாதுகாப்பு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரிச்செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியாஅம்பா ஏற்பாட்டில் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கணிணி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் பார்வதி தேவி தலைமை உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ம.தி.தா. இந்துக்கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிபேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டு 'சுற்றுப்புற நுண்ணறிவு, தொழில்நுட்பங்கள் மற்றும் பயன் பாடுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    2-வது அமர்வில் ஆசிய பசிபிக்தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கூல் ஆப்டெக்னாலஜி இணைப்பேராசிரியர் டாக்டர்செல்வகுமார் சாமுவேல் 'டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு' பற்றி உரையாற்றினார்.

    3-வது அமர்வில் சீனா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி 'கம்பி

    யில்லா தொலைத்தொடர்பில் நிகழ் ஆராய்ச்சிகள்' பற்றி உரையாற்றினார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 55 மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கி னார்கள். முடிவில் கணினி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.

    Next Story
    ×