search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்று  விழா
    X

    சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்று விழா

    • அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் கே.குமார் வரவேற்று பேசினார்.
    • மாநில சிறுபான்மைச் செயலாளர் டாக்டர் பி.சௌகத் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ஜி.கே.டி.எஸ். குணசேகரன் தலைமை தாங்கினார். அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் கே.குமார் வரவேற்று பேசினார்.

    திருப்பூர் தெற்கு பகுதி துணைச் செயலாளர் என்.ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் தெற்கு பகுதி துணைச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர் எஸ். சதீஷ்குமார், அமைப்பாளர் பி.யுவராஜ் பங்கேற்றனர்.மேலும் மாநில கழக பொருளாளர் டாக்டர் தினேஷ்குமார் கழகத்தின் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

    மாநில சிறுபான்மைச் செயலாளர் டாக்டர் பி.சௌகத் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தெற்கு தொகுதியை சேர்ந்த இளைஞரணி வீருசின்னா மற்றும் இளைஞர்களும், மகளிர் அணி சாந்தி, தங்கமணி மற்றும் மகளிர் அணியினரும், துணைச் செயலாளர்கள் நாகராஜ், ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பானுமதி நன்றி கூறினார்.

    Next Story
    ×