search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டி
    X

    நீலகிரியில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டி

    • ராமகிருஷ்ணா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா சாதனை
    • 8-ம் வகுப்பு மாணவன் தியாசிக் வட்டெறிதல் போட்டியில் 4-வது இடம்

    அரவேணு,

    நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், ஊட்டி மைதானத்தில் நடக்கிறது. இதில் நஞ்சநாடு கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா குண்டெறிதல் போட்டியில் 2-வது இடமும், வட்டெறிதல் போட்டியில் 3-வது இடமும் பிடித்து மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். மேலும் 8-ம் வகுப்பு மாணவன் தியாசிக் வட்டெறிதல் போட்டியில் 4-வது இடம் பிடித்து உள்ளார்.

    போட்டிகளில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ-மாணவியருக்கு பள்ளி தாளாளர்ஸ்ரீகவிதா கனகராஜ், பள்ளி முதல்வர்ரங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×