search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலை கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
    X

    சுவாமிமலை கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

    • ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு முருக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    சுவாமிமலை:

    தமிழகத்தில் ஆறுபடை வீடுகளின் நான்காம் படை வீடாக திகழக்கூடிய சுவாமிமலை சுவாமிநாத சுவாமிகோவிலில் ஆடி மாதம் கிருத்திகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக இரவு பகல் குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொ ரோனா காலத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு முருக பக்தர்கள் மகிழ்ச்சி யுடன் திருவிழாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    Next Story
    ×