என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத் ராம் சர்மா தலைைமயில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்லில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மங்கத் ராம் சர்மா பல்வேறு துறை களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
    • அனைத்து துறை அலு வலர்களும் தன்னலமற்று, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மங்கத் ராம் சர்மா, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பல்வேறு துறை களின் சார்பில் மே ற்கொள்ள ப்பட்டு வரும் பல்வேறு திட்ட ப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    ஆய்விற்கு பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத் ராம் சர்மா தெரிவித்ததாவது:- அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணை த்து, துறையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்ட க்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராம ரிப்புத்துறை, பொது ப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், துறை ரீதியாக செய ல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செல வினங்கள் ஆகியன குறித்தும், துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்ந்த அலுவல ர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படு த்தப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களின் செயல்பாட்டுப் பணிகள், அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, மின்சாரம், தெருவிளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல்,

    வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், விளையாட்டு த்திடல் மற்றும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல், வனத்துறையின் சார்பில் மரம் நடுதல் மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும், தேவையான நிதிநிலைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ரேசன் விலை க்கடையின் செயல்பாடுகள் மாணவர்கள் கல்வி கற்பதற்கு வழங்க ப்பட்டுள்ள கல்வி உபகர ணங்கள் ஆகியன தொட ர்பாகவும், வட்டார போக்கு வரத்து அலு வலகத்தின் செய ல்பாடுகள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ள விபரங்கள் உள்ளிட்டவைகள் தொட ர்பாகவும் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.

    பொது மக்களின் நலன் கருதிஅரசால் செய ல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அனைத்து துறை அலு வலர்களும் தன்னலமற்று, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அனைத்து துறை அலுவல ர்களுக்கும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது என தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்கள் கோட்டை குமார்(பொது), (வளர்ச்சி) ராணி, வேளாண்மை இணை இயக்குநர் அனுசுயா, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, வட்டார போக்கு வரத்து அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டா ட்சியர்கள் சரவணன், ராஜா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×