search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் மத்திய கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    தென்காசி மாவட்டத்தில் மத்திய கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • கடங்கநேரி ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மையில் செங்குத்து உறிஞ்சுக்குழி அமைத்தல், மண்புழு உரம் தயாரிக்கும் மையம் உள்ளிட்ட பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.
    • வெங்கடாம்பட்டி ஊராட்சியில், அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், மடத்தூர் ஊராட்சியில், மீள்நிரப்பு தண்டு அமைத்தல் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டம் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளின் நிலை குறித்து மத்திய கண்காணிப்பு அலுவலர், ராஜேஷ் குப்தா மத்திய தொழில்நுட்ப அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சியில், வட்டார நாற்றங்கால் பண்ணை அமைத்தல், சில்லரைப்புரவு ஊராட்சியில், தனிநபர் உறிஞ்சிக்குழி அமைத்தல், வாறுகால் அமைத்தல், குப்பை பிரித்தெடுக்கும் மையம், மண்புழு உரக் கொட்டகை அமைத்தல் பணிகள் கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், மடத்தூர் ஊராட்சியில், மீள்நிரப்பு தண்டு அமைத்தல் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூர் ஊராட்சியில் அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், குத்தப்பாஞ்சான் ஊராட்சியில், கசிவுநீர் குட்டை அமைத்தல், கடங்கநேரி ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மையில் செங்குத்து உறிஞ்சுக்குழி அமைத்தல், மண்புழு உரம் தயாரிக்கும் மையம் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹீம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×