search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காருகுடியில் பாசன வாய்காலை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    சாக்கடையாக மாறுயுள்ள பாசன கால்வாய்.

    காருகுடியில் பாசன வாய்காலை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

    • காருகுடி மேல வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி, சாக்கடை கால்வாயாக மாறியுள்ளது.
    • டெங்கு முதலிய கொசு தொல்லைகளும் சுகாதார கேடு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    திருவையாறு:

    திருவையாறில் அருகே கும்பகோணம் மெயின்ரோடில் அமைந்துள்ளது காருகுடி கிராமம். காருகுடி மெயின்ரோடிலிருந்து வடபுறமாக பிரிந்து செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் காவேரி பாசன மேல வாய்க்கால் சாலை பராமரிக்கப்படாமல் சிதைவுற்று குண்டும் குழியுமாக இருக்கிறது.மேலும், இந்த சாலையோரத்தில் உள்ள பாழடைந்த சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமலும், பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் உலவும் இடமாகவும் உள்ளது.

    மேலும், மெயின் ரோடின் தென்புறத்தில் உள்ள காவிரி ஆற்றின் தலைமதகிலிருந்து காருகுடிபிரிவுச் சாலையின் மேல்புறத்திலேயே சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையில் சென்று காருகுடி, ராயம்பேட்டை, அம்மாள்கிராம் மற்றும் பருத்திகுடி ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 800 ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாக உள்ள காருகுடி மேல வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி, சாக்கடைக் கால்வாயாக மாறியுள்ளது.

    இதனால், மேலவாய்க்காலின் ஓரத்தில் குடியிருப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதோடு, டெங்கு முதலிய கொசுத் தொல்லைகளும் சுகாதாரக் கேடு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    எனவே, காருகுடி கிராம மேல வாய்க்கால் சாலையை குண்டும் குழியும் இல்லாமல் புதுப்பிப்பதோடு,தண்ணீர் வசதியுடன் கூடிய புதிய சுகாதார வளாகம் கட்டிடவும், பாசன மேல வாய்க்காலை முழுமையாக தூர்வாரி பாசனத்திற்கும் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும்படி பராமரிப்பு செய்திடவும் ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களிடம் காருகுடி கிராம பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×