search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பான்செக்கர்ஸ் கல்லூரியில் சுதந்திர தினவிழா
    X

    பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.



    திண்டுக்கல் பான்செக்கர்ஸ் கல்லூரியில் சுதந்திர தினவிழா

    • எதிர்காலத்தில் மாணவிகளின் பங்கு மேலோங்க வேண்டும் மற்றும் நாட்டிற்கு உதவும் வகையில் தங்கள் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்றார்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் இசபெல்லா வரவேற்புரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் சிறுமலர் தலைமை உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கவுன்சிலர் மேற்கு மாவட்ட தி.மு.க பொருளாளர்விஜயன் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

    அதில் எதிர்காலத்தில் மாணவிகளின் பங்கு மேலோங்க வேண்டும் மற்றும் நாட்டிற்கு உதவும் வகையில் தங்கள் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட கவுன்சிலர் லலிதா மோகன்,வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன்,சில்வார்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பழனியம்மாள் சுந்தரம்,ஒன்றிய துணைத் தலைவர் ராமதாஸ், வி.டி.பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன்,திண்டுக்கல் மாவட்ட அறநிலையத்துறை குழு உறுப்பினர் பாக்யராஜ்,வி.டி.பட்டிஊராட்சி துணைத் தலைவர் முத்துகுமார்,ஊராட்சி செயலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக கல்லூரியின் பேராசிரியர் முகமது ஆரிபா நன்றி கூறினார்.

    Next Story
    ×