search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு - விலை வீழ்ச்சி
    X

    வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு - விலை வீழ்ச்சி

    கரூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் , நல்லிக்கோவில், முத்தனூர், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை , நடையனூர் ,கொங்கு நகர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் ,நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச்செல்வதற்காக விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.ஆலைகளில் தயாரிக்கப்பட்ட வெல்லம் ஏலச் சந்தை மூலமாக விற்பனைக்கு வரும். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×