search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அப்பநாயக்கன்பாளையத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு
    X

    அப்பநாயக்கன்பாளையத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

    • காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகராட்சி 1-வது வார்டு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மையத்தினை (ஆரம்ப சுகாதார நிலையம்) அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நிதி ஒதுக்கீடு செய்து, அமைத்து நேற்று காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி நகர்புற நலவாழ்வு மையத்தினை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்று நட்டு வைத்து சிறப்பித்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், வட்ட செயலாளர் ராஜசேகரன், பிரபாகரன், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ், மருத்துவர் அஸ்வின்ராஜ், உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, காங்கிரஸ், கொ.ம.தே.க உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×