search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
    X

    புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது.

    புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

    • ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருவை காவூர் ஊராட்சி, புதுகண்டி ப்படுகை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2019-20 ஆண்டுக்கான நிதியிலிருந்து ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிறகு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரை ச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னதாக ஊராட்சி தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஒன்றிய கவுன்சிலர் விஜயன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், ஊராட்சி துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்த லைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், ஹாஜா மைதீன், ஒன்றிய துணை செயலாளர்கள் பிரபாகரன், சரவணன், புதுகண்டி படுகை கிளை நிர்வாகிகள் மோகன், சுப்பிரமணியன், வினோத், ஒன்றிய பிரதிநிதி கருப்பூர் மகேஸ்வரன், இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.

    Next Story
    ×