search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டைநாதர் தேவஸ்தானத்தில் கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் திறப்பு
    X

    ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் திறப்பு விழாவில் தருமபுரம்ஆதீனம் பங்கேற்றார்.

    சட்டைநாதர் தேவஸ்தானத்தில் கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் திறப்பு

    • புதிதாக ரூ. 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம்.
    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் திறந்து வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்தின் அருள் ஆட்சிக்கு உட்பட்ட 28 தேவஸ்தானங்களிலும், ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய கட்டளை மடங்கள் பழையன புதுப்பித்தும், புதியன கட்டப்பட்டும் திறப்பு விழா செய்யப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஞானசம்பந்தப் பெருமான் ஞானப்பால் அருந்திய சட்டநாதர் கோவில் கிழக்கு சன்னதியில் புதிதாக ரூ 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க திறந்து உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் திறந்து வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அங்கு தருமபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சொக்கநாதர் பெருமான் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருஞான சம்பந்தத ம்பிரான், சொக்கலி ங்கம்தம்பிரான், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி, ஆன்மிகபேரவை ஒருங்கி ணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன் மற்றும் தருமபுரம் மடத்தினை சேர்ந்த கோதண்டராமன், செந்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஏற்பாடுகளை தருமபு ரம் ஆதீன கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சீர்காழி சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×