என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூரில் தி.மு.க.அலுவலகம் திறப்பு
- தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
- 15 வார்டு செயலாளர்கள்,நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் பேரூராட்சி தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கம்பைநல்லூர் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் மோகன் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் இ.மாசிலாமணி, மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் செங்கண்ணன், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன்,முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கிருஷ்ணன், எஸ். கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி தி.மு.க. இளைஞரணி செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார்.
தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கம்பைநல்லூர் பேரூராட்சி உறுப்பினர்கள் சங்கீதா ஜெயக்குமார்,நந்தினி திருமால், கீதா சேகர்,விஜயலட்சுமி சுரேஷ் மற்றும் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு செயலாளர்கள்,நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.






