search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி பகுதியில்வாட்ஸ் அப்பில் லாட்டரி விற்ற 2 பேர் கைது
    X

    வாழப்பாடி பகுதியில்வாட்ஸ் அப்பில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

    • வாட்ஸ் அப் வழியாக லாட்டரி விற்பனை நடை பெறுவதாக, வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சமூக ஊடகங்களை கண்காணிக்க தொடங்கினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வாட்ஸ் அப் வழியாக லாட்டரி விற்பனை நடை பெறுவதாக, வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சமூக ஊடகங்களை கண்காணிக்க தொடங்கினர்.

    அதன்படி, வாட்ஸ் அப்பில் லாட்டரி விற்பனை செய்ததாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சேகர் (வயது 56), தனியார் பால் நிறுவன ஊழியர் விக்னேஷ் (24) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×