என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு பொதுதேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பாராட்டு
- விஜயக்குமார் என்பவர் 412 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்தினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளில் 263 பேர் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர்.
இதில் கதிரேப் பள்ளியை சேர்ந்த சங்கரன் மகன் விஜயக்குமார் என்பவர் 412 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.இவருடைய அப்பா தனியார் கம்பெனியில் தினக்கூழியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் முத்தே கவுடா பி, டி, ஏ தலைவர் ராமன், பி, டி,எ , பொருளாலர் அஸ்பர் , செயலர் சுதாகர், பொது குழு ஜெபஸ்டின், ஆசிரியர் கணேசன் , ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டினர்.
Next Story






