search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், தமிழக பண்பாட்டு கண்காட்சி- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி சான்றிதழ் வழங்கினார்.

    தஞ்சையில், தமிழக பண்பாட்டு கண்காட்சி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • மாணவ- மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
    • தமிழர்களின் 64 கலைகள், தமிழர்களின் மரபு விழாக்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்தும் 14-வது ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது.

    இந்த கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக பெண்கள் செயற்களம் மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமை தாங்கினார்.

    தமிழக பெண்கள் செயற்களம் அமைப்பாளர் மங்கைநம்பி மற்றும் குமரவேல் முன்னிலை வகித்தனர்.

    தமிழக பெண்கள் செய ற்களம் செயற்குழு உறுப்பினர் சாரதா,

    தமிழக பெண்கள் செயற்களம் நிர்வாகி யுவராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழர் வரலாறு, தொன்மை குறித்த புத்தகத்தில் வினா, விடை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊக்கத் தொகையுடன், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த கண்காட்சியை பார்வையிட வரும் மாணவ, மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நா.மு வேங்கடசாமி நாட்டார் கல்லூரி இயக்குனர் விடுதலை வேந்தன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் துணைப் பொது மேலாளர் ரவிக்குமார், தமிழக பெண்கள் செயற்களம் நிர்வாகிகள் சீர்த்தி,வெண்ணிலா, தாமரை ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    கண்காட்சியில் உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர்களின் வரலாறு, தமிழர் மரபு மற்றும் உணவு வகைகள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களுடைய இசைக்கருவிகள், சிலம்பம் உள்ளிட்ட மரபு விளையாட்டுகள், தமிழர்களின் 64 கலைகள், தமிழர்களின் மரபு விழாக்கள், நாட்டுப்புறக்கலைகள், இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள், தமிழர்க ளின் தொன்மையான இசை வாத்தியங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் நடைபெ ற்றது.

    இன்று 2-வது நாளாக கண்காட்சி நடைபெற்றது. ஏராளமானோர்பார்வை யிட்டனர். இந்த கண்காட்சி யானது நாளை வரை நடைபெறுகிறது.

    Next Story
    ×