search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர்.

    தஞ்சையில், ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வு உடனே வழங்க வேண்டும்.
    • காசில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் தஞ்சை மாவட்டம் சார்பில் இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    1-7-2022 முதல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வு உடனே வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும்,70 வயது நிறைவுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் விரைவாக வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காசில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராஜன் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×