search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மாவட்ட இளையோர் திருவிழா கலைப்போட்டிகள்
    X

    தஞ்சையில், மாவட்ட இளையோர் திருவிழா கலைப்போட்டிகள்

    • போட்டியில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான இளையோர்கள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நேருயுவ கேந்திரா சார்பில் இந்திய சுதந்திர அமிர்த திருநாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இத்திருவிழாவில் இளையோர் கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, மொபைல் போட்டோ போட்டி, பேச்சுப்போட்டி, 2047-ல் இந்தியா எனது கனவு கருத்தரங்கம், கிராமிய குழு நடனப்போட்டி ஆகியவை நடைபெற்றது.

    இதனை அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ரெவரன்ட் பாதர் முனைவர் செபாஸ்டியன் பெரியண்ணன், தமிழ ர்களின் கலை, கலாச்சார பெருமைகளை எடுத்துக் கூறி தொடக்கி வைத்தார்.

    இப்போட்டிகளில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளையோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். இப்போட்டிகளின் நடுவர்க ளாகவும், நிகழ்ச்சிகளின் கருத்தாளர்களாகவும் கலலூரி பேராசிரியர்களும், நாட்டுப்புற கலைஞர் கவிஞர் வீர.சங்கர் ஆகியோர் பணியாற்றினர்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் பிலோமிநாதன், தலைமையில் நடைபெற்றது.

    டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை, நேருயுவ கேந்திராவின் மாவட்ட ஆலொசனைக் குழு உறுப்பினர் ராமலிங்கம், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க கௌரவப் பொருளாளர் முத்துக்குமார், ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    முன்னதாக, நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், வரவேற்றார். நேருயுவ கேந்திராவின் கணக்காளர் பவுன்ராஜ் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் தொண்டர்களும், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×