search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில்தொடர் மொபட் திருட்டில் ஈடுபட்ட தொழிலாளி கைது
    X

    பொள்ளாச்சியில்தொடர் மொபட் திருட்டில் ஈடுபட்ட தொழிலாளி கைது

    • மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோைவ மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 75). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காந்தி சிலை அருகே உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். அங்கு தனது மொபட்டை நிறுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். பணத்தை எடுத்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபட்டை காணவில்லை.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குமாரசாமி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மொபட் திருட்டு போனது குறித்து பொள்ளாச்சி டவுன் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதேபோன்று பொள்ளாச்சி பனிக்கம்பட்டியை சேர்ந்தவர் அம்சவேனி (38). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சுப்பம்மாள் வீதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார்.

    அங்கு தனது மொபட்டை நிறுத்தி ஓட்டலுக்குள் சென்றார். சிறது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது மொட்டை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடி ெசன்று விட்டனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அம்சவேனி இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி டவுன் கிழக்கு போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    சந்ததேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர் திருப்பூரை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திகுமார் (41) என்பதும், அவர் குமாரசாமி மற்றும் அம்சவேனியின் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சக்திகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×