search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  சாலை நடுவே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்து
    X

    சாலை நடுவே கவிழ்ந்து கிடக்கும் கரும்பு ஏற்றி வந்த டிராக்டரை படத்தில் காணலாம். 

    பண்ருட்டியில் சாலை நடுவே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்து

    • பண்ருட்டியில் சாலை நடுவே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • டிராக்டர் கவிந்ததால்அந்த வழியாக வந்தவர்கள் பதறிஓடினர்.அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் ரிஷிவந்தியத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று நேற்றுவந்தது .பார்த்திபன் (55) என்பவ ர்டிராக்டரை ஓட்டி வந்தார். இந்த டிராக்டர் நேற்று மாலை பண்ருட்டி வந்தது பண்ருட்டி லிங்க் ரோடு வழியாக வந்த டிராக்டர் இந்திரா காந்தி சாலையில் திரும்பி வந்து கொண்டி ருந்தது அப்போது பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் வந்த போது திடீரென்று டிராக்டர் டிப்பர் நடு ரோட்டில் கவிழ்ந்தது. டிராக்டர் கவிந்ததால்அந்த வழியாக வந்தவர்கள் பதறிஓடினர்.அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து, பாதித்தது. இது பற்றி தகவல் பண்ருட்டி போலீசார் சம்பவத்திற்குவிரைந்து வந்து சாலை நடுவே கவிழ்ந்து கிடந்த டிராக்டர் டிப்பரை அப்புறப்ப டுத்தினார்.சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்ய ப்பட்டது இதனால்அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×