search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரத்தநாட்டில், மா.கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    ஒரத்தநாட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஒரத்தநாட்டில், மா.கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    • வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
    • கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும்.

    திருவோணம்:

    ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் எனவும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் டெல்டா விவசாயிகளை பாதுகாக்க கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மோகனதாஸ்,

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கர், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×