என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் தாலுகாவில்பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற ஆர்.டி.ஓ.
- ஸ்ரேயா சிங் தலைமையில் அடுத்த மாதம் 12-ந்தேதி மோடமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.
- பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் அடுத்த மாதம் 12-ந்தேதி மோடமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற வுள்ளது. அதனையொட்டி மோடமங்கலம் ஈ.சேவை மையத்தில் தங்கள் குறைகள் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை, ஒரே பட்டாவாக மாற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா, உட்பிரிவு பட்டா, புதிய ரேசன் கார்டுகள் பெற என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான 144 மனுக்களை கொடுத்தனர். இதில் வட்டாட்சியர் சண்முக வேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கம், வருவாய் ஆய்வாளர் கார்த்திகா, கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மனுக்களுக்கு 12-ந்தேதி நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் தீர்வு காணப்பட்டு நல உதவிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்