என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்   வேலை செய்யும்போது தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    கிருஷ்ணகிரியில் வேலை செய்யும்போது தவறி விழுந்து தொழிலாளி பலி

    • கிருஷ்ணகிரியில் தொழிலாளி விபத்தில் உயிரிழந்தார்.
    • வேலை செய்தபோது அவர் தவறி கீழே விழுந்தார்.

    தருமபுரி,

    வேலூர் மாவட்டம் கோட்டை பசுலுல்லா தெரு பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 38). வெல்டிங் வேலை பார்த்து வந்தார்.

    இவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகத்திற்குட்பட்ட இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றில் விளம்பர பலகை பொருத்துவதற்காக வெல்டிங் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அமானுல்லா தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அமானுல்லா உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×