என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  விஷம் குடித்த பெண் சாவு
    X

    கிருஷ்ணகிரியில் விஷம் குடித்த பெண் சாவு

    • கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சிவகாமி (வயது38). இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×