என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
- தீராத வயிற்று வலியால் அருண்குமார் அவதிப்பட்டு வந்தார்.
- கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் திட்டம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருண்குமார் (வயது 24).
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அருண்குமார் இதில் மனமுடைந்து கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.
மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story