என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் 3 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு மாயமான இளம்பெண்
Byமாலை மலர்9 Sep 2022 9:31 AM GMT
- தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு புறப்பட்ட பவித்ரா குழந்தையை அங்கு விட்டுவிட்டு மாயமாகிவிட்டார்.
- கிருஷ்ணகிரி முருகன் நகரை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர்தான் பவித்ராவை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் பெண்டேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (வயது 40).
இவரது மகள் பவித்ரா. பவித்ராவுக்கு, தமிழரசன் என்பவருக்கும் திருமணமாகி கவிதமிழ் என்ற 3 மாத குழந்தை உள்ளது.
இந்நிலையில் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு புறப்பட்ட பவித்ரா குழந்தையை அங்கு விட்டுவிட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஷோபனா புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் கிருஷ்ணகிரி முருகன் நகரை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர்தான் பவித்ராவை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவித்ராவையும், கடத்தியதாக கூறப்படும் சூர்யாவையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X