என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில்10 அடிநீள பாம்பு பிடிபட்டது
- அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
- தின்பண்டங்கள் தயாரிக்கும் அடுப்பு உள்ளது.
அரவேணு,
கோத்தகிரி காவலர் குடியிருப்பு பகுதி அருகே தனியார் பேக்கரிக்கு சொந்தமான தின்பண்டங்கள் தயாரிக்கும் அடுப்பு உள்ளது. அங்கு அடுப்பின் மேல் பகுதியில் பாம்பு ஒன்று இருப்பதாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கருப்புசாமி, தீயணைப்பு வீரர்கள் நித்தியானந்தன்,விஜய்க்குமார், மணி, முத்துகுமார் , கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்ேபாது 10 அடி நீள பாம்பு அங்கு இருந்தது. அதனை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
Next Story






