என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜேடர்பாளையம் நான்கு ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு; பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர் இடத்தை காலி செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள்.
- நாங்கள் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்கிறோம். அதே சமயம் எங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர் பாளையம் சரளைமேடு பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கும் மேற்ப ட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை துறைக்கு சொந்த மான இடத்தில் குடியிருந்த வர்களை வேறு பகுதிக்கு சென்று குடியிருக்குமாறு அறிவுறுத்தினர்.
இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர் இடத்தை காலி செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள்.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அ.மு.மு.க.வை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஜேடர் பாளையம் நான்கு ரோடு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி பேசியதாவது:-
ஜேடர்பாளையம்- பரமத்தி செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையில் இருபக்கமும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள நிலங்களில் தான் கடந்த 120 ஆண்டுகளாக ஏழை கூலி மக்கள் குடிசை போட்டு தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வீடுகளை காலி செய்திட தனி ஒரு நபர் சுயநலத்திற்காக வழக்கு தொடர்ந்து 2010-ஆண்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசும், பொதுமக்களும் அறியாத வகையில் வழக்கு நடந்துள்ளது. தற்போது இதே தனிநபர் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார் .ஆனால் இது குறித்து இப்பகுதி பொதுமக்களின் கருத்துக்களை அறியவும், மாற்று ஆலோசனைகள் மற்றும் தீர்வுக்கு வழிகான ஒரு வழி காட்டவும் இல்லாமல் திடீரென்று தீர்ப்பு கொடுத்து மக்களின் குடிசைகளை இடித்து தரைமட்டம்ஆக்குவது சரியான தீர்வாகாது.
மேலும் நாங்கள் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்கிறோம். அதே சமயம் எங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். மாநில அரசு அவசர, அவசிய வழக்காக மேல்முறையீடு செய்து குடிசைகளை தரைமட்டமாக முடிவை தள்ளி போட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுவது உண்மை எனில் முறையாக சரியாக அளவீடு செய்து முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும்.
நெடுஞ்சாலை விரிவா க்கம் நடைபெறும் வரை மக்களை வாழ விட வேண்டும் .காலி செய்யும் நிலை வரும் போது அனைவருக்கும் இலவச வீட்டு மனை வீடு கட்டிக்கொள்ள தேவையான பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு போலீஸ் டி.எஸ்.பி. ராஜா ரணவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், வீரம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்