என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைத்ததால் தகராறு
    X

    ஓசூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைத்ததால் தகராறு

    • முனிராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை இரும்புக் கம்பியால் சிலர் தாக்கியதாக தெரிகிறது.
    • 4 பேர் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

    ஓசூர்,

    ஓசூரில் பா.ம.க.சார்பில் பேனர் தயாரித்து வைத்தது தொடர்பாக முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் மற்றும் சிலரிடையே நேற்று தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து முனிராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை இரும்புக் கம்பியால் சிலர் தாக்கியதாக தெரிகிறது.

    இதில் முனிராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் 4 பேர் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×