என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தேசியக்கொடி வழங்கி விழிப்புணர்வு
- பயணிகளுக்கு தேசியக்கொடி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மாநகராட்சி ஆணை யாளர் பாலசுப்பிரமணியன் கொடி களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
ஓசூர்,
நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓசூர் மாநகராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் இன்று காலை பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தேசியக்கொடி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகாட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கொடி களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
மேலும் இதில் மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், மாதேஸ்வரன் மற்றும் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர் அஜிதா, மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






