search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்
    X

    ஓசூரில் மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்

    • கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூர்-தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
    • மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஓசூர்,

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவஅணி ஆகிய வற்றின் சார்பில் நாளை, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூர்-தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன், பொருளாளர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் கட்சியினர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், மேற்கு மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரகாஷ் எம்.எல்.ஏ.கூறினார்.

    Next Story
    ×