search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில், ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு, முன்னாள் அமைச்சர் அழைப்பு
    X

    ஓசூரில், ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு, முன்னாள் அமைச்சர் அழைப்பு

    • இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ஆம் தேதி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மதுரை மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி, கட்சி தொண்டர்களுடன், ஆட்டோக்களில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் மற்றும் பேனர்களை ஒட்டினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர். வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×