என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு
- காப்பர் கம்பிகள், உள்ளிட்ட பொருட்கள் திருடு போயுள்ளது.
- ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயுள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள மதரசனபள்ளி மின்வாரிய அலுவலகத்தில் ரூ.2 லட்சத்து இருபது ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகள், உள்ளிட்ட பொருட்கள் திருடு போயுள்ளது.
இதே போல தேன்கனி கோட்டை அருகேயுள்ள மருதனப்பள்ளி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயுள்ளன.
இந்த சம்பவங்கள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் கார்த்திகேயன், சுரேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி, தேன்கனி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Next Story






