என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தருமபுரியில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள்
- தருமபுரி மாவட்டத்தில் உலாமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 275 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.
- மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.10.54 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உலாமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 275 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு, மகப்பேறு, கருச்சிதைவு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உலாமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து, அந்நலவாரியத்தால் வழங்கப்படும் நலத்திட்டங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பெற்று, தகுதியான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டிலும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டிலும் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகையும், உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரிய உறுப்பினருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000- மானிய நிதியும்,
10 பயனாளிகளுக்கு தலா ரூ.6,160- வீதம் ரூ.61,600- மதிப்பீட்டில் விலையில்லா தையல் எந்திரங்களும், 7 பயனாளிகளுக்கு உலமாக்கள் மற்றும் பணியா ளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினருக்கான அடையாள அட்டையும் என மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.10.54 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.






