என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயம்
- இவர் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கல்லடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பென்னாகரம் அருகே உள்ள லாடகக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (45). இவர் கடந்த 18-ம் தேதி பெங்களூர் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பெரும்பாலை அருகே உள்ள பெத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சின்னவன். இவருடைய மகன் அய்யன்துரை (32). இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை உள்ளது. வேலைக்கு செல்வதாக கூறி சேலம் சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.