search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூர்: மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு- விலை கடும் சரிவு
    X

    அய்யலூர் மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தக்காளி.

    அய்யலூர்: மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு- விலை கடும் சரிவு

    • தக்காளி 1 கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை கேட்க ப்பட்டதால் வேதனையடைந்த விவசாயிகள்
    • தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வடதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கு தனி மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்க ளான மோர்பட்டி, தீத்தா கிழவனூர், நடுப்பட்டி, கல்பட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

    சென்னை, கோவை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளிமாநில தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கிராமங்களிலும் அதிக அளவில் தக்காளி விளைந்துள்ளது. இதனால் அய்யலூர் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து காணப்ப ட்டது.

    தரமான தக்காளிகள் 2 முதல் 5 வரை ஏலம் போனது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.60 முதல் ரூ.170 வரை விற்பனை யானது. ஒரு கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை கேட்க ப்பட்டதால் வேதனை யடைந்த விவசாயிகள் தக்காளி களை சாலை யோரம் வீசி சென்றனர்.

    இங்கு தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.


    Next Story
    ×