search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுமுடியாறு அணையில் இருந்து  உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    கொடுமுடியாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்களம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
    • ராஜாக்கமங்களத்தில் உள்ள குளத்தில் இருந்து இந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் உள்ளன.

    நெல்லை:

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்களம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

    ராஜாக்கமங்களத்தில் உள்ள குளத்தில் இருந்து இந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் உள்ளன.

    ஆனால் ராஜாக்கமங்களம் குளத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அதனால் பாசன வசதி பெற்று வரும் 250 ஏக்கர் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கொடுமுடியாறு

    கொடுமுடியாறு அணையில் தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் அதிலிருந்து 2 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள 250 ஏக்கர் நெற்பயிர்கள் காப்பாற்றப்படும்.

    நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் விடும் பருவத்தில் இருப்பதால், மாவட்ட கலெக்டரும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் உடனடியாக கொடுமுடியாறு அணையில் இருந்து, ராஜாக்கமங்களம் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் கொடு முடியாறு அணையில் இருந்து 2 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட மாவட்ட கலெக்டருக்கும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.

    Next Story
    ×