search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் வாட்ஸ்-அப்பில் புகார் அளிக்கலாம்
    X

    நாகையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் கூட்டம் நடந்தது.

    கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் வாட்ஸ்-அப்பில் புகார் அளிக்கலாம்

    • புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.
    • ஒவ்வொரு வாரமும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சா ராயம் காய்ச்சுபவர் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை விற்பனை செய்வதை தடுப்பது குறித்த கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்ததாவது:-

    கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து நாகை மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுப்பது, அனுமதி பெற்ற பார்களை தவிர பிற பார்களில் மதுபானங்கள் விற்பது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பது போன்றவை தெரியவந்தால் 94981 81257 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

    புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும், புகாரில் உண்மை தன்மை இருப்பின் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், ஒவ்வொரு வாரமும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×