என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவருடன் தகராறால் பெண் தற்கொலை
    X

    கணவருடன் தகராறால் பெண் தற்கொலை

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • ராணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள நெக்குத்தி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 34).

    இவருக்கும் சிவகுமார் என்பவருக்கும் திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகிறது. சிவகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இதேபோல ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ராணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ராணியின் சகோதரர் தம்பிதுரை கொடுத்த புகாரின்பேரில் தேன்கனி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×