என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கணவன்-மனைவி மாயம்
    X

    கணவன்-மனைவி மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள என்னேகால் புதூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 23). இவர் குருபரபள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    அனிதாவுக்கும், சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுரேசை பிரிந்த அனிதா தொட்டதிம்மனஅள்ளியில் உள்ள தனது அண்ணன் வேங்கடேன் என்பவரது வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார்.

    அங்கிருந்து அனிதா வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்ற அனிதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அனிதா வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று வெங்கடேசன் விசாரித்தார்.

    அப்போது 1-ந்தேதி அன்று அந்த நிறுவனத்துக்கு வந்த சுரேஷ், அனிதாவை அழைத்து பேசியதாகவும், இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து குருபரபள்ளி போலீசில் வெங்கடேசன் புகார் செய்துள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×