என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை தாக்கிய கணவன் கைது
    X

    மனைவியை தாக்கிய கணவன் கைது

    • கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் அனிதா மாதேபள்ளியில் மகளுடன் வந்து வசித்து வருகிறார்.
    • கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள மாதேபள்ளியை சேர்ந்தவர் அனிதா (வயது 32). இவருக்கும் பெங்களூரு நாராயனபுரா பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் திருமணமாகி இந்துபிரியா (16) என்ற மகள் உள்ளார்.

    இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் அனிதா மாதேபள்ளியில் மகளுடன் வந்து வசித்து வருகிறார். அங்கு வந்த பிரபாகரன், அனிதாவுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அனிதா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது மகள் இந்துபிரியா கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    Next Story
    ×