என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை மரகட்டையால் தாக்கிய கணவன் கைது
    X

    மனைவியை மரகட்டையால் தாக்கிய கணவன் கைது

    • கடந்த 8-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த ராஜா அருகில் மரக்கட்டையை எடுத்து தனது மனைவியின் காலில் தாக்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளுக்குறுக்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது29). இவர் தனியார் நிறுவனத்தில் வேைல பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (26). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ராஜா அருகில் மரக்கட்டையை எடுத்து தனது மனைவியின் காலில் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரோஜா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

    Next Story
    ×