search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழநத்தம் ஊராட்சியில் மனித உரிமைகள் விழிப்புணர்வு  கூட்டம்
    X

    விழிப்புணர்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    கீழநத்தம் ஊராட்சியில் மனித உரிமைகள் விழிப்புணர்வு கூட்டம்

    • பாளை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    பாளை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமையில் நடைபெற்றது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் கலந்து கொண்ட பெண்களிடம், மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகள், பெண்களுக்கான நீதிகள், அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவர் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் ராஜாமணி, பணித்தள பொறுப்பாளர் சோபனா, ஊர் நாட்டாமைகள் செந்தூர் கனி, பரமசிவன், கிருஷ்ணன், பம்ப் ஆப்ரேட்டர் ராமச்சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×