search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து 1½ வயது குழந்தை பலி
    X

    வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து 1½ வயது குழந்தை பலி

    • பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, கூலித்தொழிலாளி.
    • வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் திடீரென இடிந்து குழந்தை ஆதிரா, மகேந்திரன் ஆகியோர் மீது விழுந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு குழந்தை ஆதிரா, தனது தாத்தா மகேந்திரனுடன் (வயது 50) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் திடீரென இடிந்து குழந்தை ஆதிரா, மகேந்திரன் ஆகியோர் மீது விழுந்தது. இதில் குழந்தை ஆதிரா பரிதாபமாக உயிரிழந்தது. மகேந்திரன் காயம் அடைந்தார்.

    Next Story
    ×