search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75 பவுன் நகை கொள்ளை வழக்கில் வீட்டின் உரிமையாளரின் மனைவி கைது
    X

    75 பவுன் நகை கொள்ளை வழக்கில் வீட்டின் உரிமையாளரின் மனைவி கைது

    • கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
    • லாவண்யா நகைகளை வீட்டில் தானே மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடியது தெரியவந்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் மகாலட்சுமி நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி லாவண்யா (வயது 35).

    இந்நிலையில் தனது மனைவி லாவன்யா, மகளுடன் கடந்த செப்டம்பர், 30 ம் தேதி செட்டி சத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 75 பவுன் திருட்டு போனது.

    இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரபாகரன், ராஜ்மோகன், முத்து ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் லாவண்யாவை நேரில் அழைத்து விசாரித்து எச்சரிக்கை செய்தனர்.

    பின்னர் தனது வீட்டில் மற்றொரு பேக்கில் 73 பவுன் நகை இருந்ததாக கூறி காவல் காவல் நிலையத்தில் லாவன்யா ஒப்படைத்தார்.

    அதனைத் தொடர்ந்து லாவண்யாவை தங்க நகையை வீட்டில் தானே மறைத்து வைத்துக் கொண்டு நாடகம் ஆடியதாகவும், பொய் புகார் அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் நேற்று இரவு லாவன்யாவை கைது செய்தனர்.

    Next Story
    ×