என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் மருத்துவமனையில் விலை உயர்ந்த செல்போன்களை திருடிய வாலிபர் கைது
- 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.
- அந்த வாலிபரை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
திருச்சியை சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் மருத்துவமனையில் பணியில் இருந்த பொது அங்கு வந்த ஒரு வாலிபர் பிரவீன் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். பிரவீன் மற்றும் அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
Next Story






